தமிழ்நாடு

தமிழக பள்ளிகளில் பருவத்தேர்வுகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Published

on

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பருவ தேர்வுகள் நடத்தப்படுவது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதனை அடுத்து இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது என்றும் பருவ தேர்வுகள் மற்றும் முழு ஆண்டு தேர்வுகள், பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே முடிவு செய்தது போல் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் பருவ தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தெரிந்துகொண்டு அதன்பிறகு பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version