தமிழ்நாடு

‘நீ என் ஏரியால வந்து நின்னு ஜெயிச்சுக்காட்டுயா… நீ வாயா, நீ வாயா!’- ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் நேரடி சவால்

Published

on

வரும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் நிற்கும் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக போட்டியிட வேண்டும் என்று பலரும் சவால் விட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘ஸ்டாலின் எங்கு போட்டியிடுகிறாரோ அந்த இடத்தில் தான் நான் போட்டியிடுவேன். சரிக்குச் சமமாக நின்று ஜெயித்துக் காட்டுவேன்’ என்று அதிரடி சவால் விட்டிருந்தார். இந்நிலையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், மீன் வளத் துறை அமைச்சருமான ஜெயக்குமாரும், மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார்.

அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘இதுவரை நான் என் தொகுதியான இராயபுரத்தில் இருந்து 5 முறை சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். வரும் தேர்தலிலும் இங்கு தான் நான் போட்டியிடுவேன். வெற்றி காண்பேன். திமுகவின் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு நான் நேரடி சவால் விடுகிறேன். என் தொகுதியில் வந்து போட்டியிட்டு நீங்கள் ஜெயித்துக் காட்டுங்கள் பார்ப்போம்.

நீங்கள் தான் ஆட்சியமைக்கப் போகிறீர்கள் என்று பேசி வருகிறீர்கள் அல்லவா? இந்த சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள். ஸ்டாலின் முதலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் நின்றார். பின்னர் கொளத்தூர் தொகுதியில் நின்றார். இந்த முறை கொளத்தூரில் போட்டியிடுவாரா அல்லது திருவாரூர் ஓடுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால், நான் அப்படி இல்லை. ஒரே தொகுதியில் தான் போட்டியிடுவேன்.

ஸ்டாலினுக்கு மட்டுமல்ல மொத்த திமுகவுக்கும் சவால் விடுகிறேன். உங்களுக்குத் திராணி, திறமை, தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து இராயபுரத்தில் போட்டியிடுங்கள் பார்ப்போம்’ என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version