கிரிக்கெட்

இந்திய அணிக்கு தோனி அவசியம், வீணாக்கி விடாதீர்கள்: மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை!

Published

on

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று பலம் வாய்ந்த அணியாக உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது. அதே நேரத்தில் கடைசி நேரத்தில் ரன் குவிக்க தடுமாறுகின்றனர். இதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான தோனி கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இந்தியா டுடே ஊடகத்துக்கு பேட்டியளித்த கிளார்க், தோனியை சந்தேகப்படக்கூடாது, இதனை மக்கள் உணரவில்லை. நீங்கள் சிறந்த வீரர்களை சந்தேகிக்க கூடாது. தோனி சிறந்த ஒரு வீரர். தற்போது இந்திய அணி தோனி இல்லாமல் சிறப்பாக விளையாடி வருகிறது. அதற்காக தோனியை விணாக்கி விடாதீர்கள்.

தோனி இந்திய அணிக்கு மிகவும் அவசியமானர். அவர் தேவைப்படும்வரை அவரைப் பாதுகாத்து வையுங்கள். அரையிறுதியிலோ, இறுதிப் போட்டியிலோ தோனி சிறப்பாக விளையாடலாம் என கூறியுள்ளார்.

Trending

Exit mobile version