உலகம்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்த மியா கலிஃபா!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பிரபல போர்ன் ஸ்டார் மியா கலிஃபாவும், விவசாயிகள் போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
அவர், ‘டெல்லியில் எந்த மாதிரியான மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. போராட்டக் களத்தில் இணைய சேவையைத் துண்டித்து விட்டார்களமே’ என்று ஒரு ட்வீட்டிலும்,
What in the human rights violations is going on?! They cut the internet around New Delhi?! #FarmersProtest pic.twitter.com/a5ml1P2ikU
— Mia K. (Adri Stan Account) (@miakhalifa) February 3, 2021
‘விவசாயிகள் பணத்துக்காக நடிப்பவர்களா? அப்படியென்றால், விருது வழங்கும் விழாக்களில் அவர்களையும் பரிசீலிக்காமல் விட்டுவிடக் கூடாது. நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன்’ என்று இன்னொரு ட்வீட்டில் கூறியுள்ளார்.
“Paid actors,” huh? Quite the casting director, I hope they’re not overlooked during awards season. I stand with the farmers. #FarmersProtest pic.twitter.com/moONj03tN0
— Mia K. (Adri Stan Account) (@miakhalifa) February 3, 2021
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 65 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்றனர். கடைசியாக அவர்கள் குடியரசு தினமான, ஜனவரி 26 ஆம் தேதி, டிராக்டர் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இந்நிலையில் மீண்டும் மத்திய அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் புது வித போராட்ட யுக்தியைக் கையில் எடுக்க உள்ளனர்.
அதன்படி, வரும் சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். அதன்படி சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கம் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்குக் கடந்த சில நாட்களாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல போராட்டக் களத்திற்கு மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதியையும் துண்டித்துள்ளது அரசுத் தரப்பு. இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் தான், அதற்கு கவனம் சேர்க்கும் வகையில் ரிஹானா ட்வீட்டியிருந்தார். அவர், ‘இது குறித்து நாம் ஏன் பேசுவதில்லை?!’ என்று கேட்டு சி.என்.என் செய்தி நிறுவனத்தின் ஒரு செய்தியையும் பதிவிட்டுள்ளார்.
We stand in solidarity with the #FarmersProtest in India.
https://t.co/tqvR0oHgo0— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
அவரைப் போலவே கிரெட்டாவும், ‘நாங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம்’ என்றுள்ளார். இந்நிலையில் மியா கலிஃபாவும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.