வைரல் செய்திகள்
விவசாயிகள் போராட்டம்: பிரியங்கா சோப்ரா வம்பிழுக்கும் மியா கலிஃபா… கொந்தளித்த ரசிகர்கள்
இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் இருக்கிறேன் என மியா கலிஃபா ட்வீட் செய்துள்ளார்.
டெல்லியில் இந்திய விவசாயிகள் போராட்டம் கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய பிரபலங்கள் விவசாயிகளுக்கு எதிராகவும் அரசு ஆதரவாகவும் பேசுவதாக நாடு முழுவதும் சர்ச்சை எழுந்தது. அந்த சூழலில் சர்வதேச பிரபலங்கள் ஆன பாடகி, நடிகை ரிஹானா, மியா கலிஃபா, சுற்றுச்சூழல் போராளி க்ரெட்டா தன்பெர்க் ஆகியோர் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதற்கு இந்தியாவில் இருந்து மிகுந்த ஆதரவும் பாலிவுட், கிரிக்கெட் பிரபலங்களிடமிருந்து எதிர்பும் எழுந்தது. இந்த சூழலில் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ரா விவசாயிகள் குறித்து ஏன் பேசவில்லை என்பது போல் மியா கலிஃபா கேள்வி எழுப்பி உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் மியா கலிஃபா, “திருமதி ஜோனஸ் ஏதாவது கூற விரும்புவாரா? எனக்கு ஆவலாக இருக்கிறது. பெய்ரூட் சம்பவத்தின் போது அமைதி காத்த ஷகிரா போன்றதொரு சூழல். அமைதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Is Mrs. Jonas going to chime in at any point? I’m just curious. This is very much giving me shakira during the Beirut devastation vibes. Silence.
— Mia K. (@miakhalifa) February 7, 2021
மியாவின் இந்தக் கருத்துக்கு பிரியங்கா சோப்ராவின் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காரணம் விவசாயிகளின் போராட்ட தொடக்க நிலையிலேயே விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
Our farmers are India’s Food Soldiers. Their fears need to be allayed. Their hopes need to be met. As a thriving democracy, we must ensure that this crises is resolved sooner than later. https://t.co/PDOD0AIeFv
— PRIYANKA (@priyankachopra) December 6, 2020