சினிமா செய்திகள்
சுவர் ஏறி குதித்தாரா விஷால்? இளம்பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
கோபாலபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நடிகர் விஷால், இன்று அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து ஓடியதாக முகநூல் பக்கத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஷால், அயோக்யா படத்தில் நடித்து வருகிறார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், சென்னை, கோபாலபுரத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் 4வது மாடிக்கு அதிகாலை 2 மணிக்கு விஷால் திருட்டுத் தனமாக சென்றதாகவும், 2 மணி நேரம் கழித்து அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து பின் பக்கமாக ஓடியதாகவும், விஸ்வதர்ஷினி எனும் இளம்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
விஷால் செய்த அட்டகாசங்கள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும், மேலும், இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மீ டூ விவகாரங்கள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் விஷால் யார் வீட்டுக்கு நடுராத்திரியில் சென்று அதிகாலையில் சுவர் ஏறி குதித்தார் என்றும், அந்த குடியிருப்பில் பிரபலமான நடிகை யாராவது வசிக்கின்றனரா என்றும் நெட்டிசன்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து விஷால் விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.