சினிமா

மீடூ விவகாரம்: மெளனம் கலைத்தார் ஏ.ஆர். ரஹ்மான்!

Published

on

மீடூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து பெயர் சிக்கியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். அதே நேரத்தில் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து வரும் சின்மயியும் இவரது இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், மீடூ விவகாரத்தில் முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மான் தனது கருத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கண்டிக்கத்தக்கது. மீடூ விவகாரத்தில் வெளியிடப்பட்டுள்ள பெயர்கள் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூக வலைதளங்கள் மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகின்றன. எனது அலுவலகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு சூழல் என்றுமே குறையாது. அதே நேரத்தில் சக்தி வாய்ந்த மீடு இயக்கத்தை சுயநலத்திற்காக தவறாகவும் பயன்படுத்தக் கூடாது என அறிவித்தார்.

மீடூ இயக்கத்திற்கு ரஹ்மான் ஆதரவு தெரிவித்ததை ரீடிவீட் செய்து சின்மயி நன்றி தெரிவித்தார்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version