தமிழ்நாடு
டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: இன்று கொட்டப்போகுது கனமழை!
![rain 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/rain-1200.jpg)
இன்னும் சில மணி நேரங்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யப்போவதாக ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை வாய்ப்பு என்றும் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் பல இடங்களில் இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.