தமிழ்நாடு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Published

on

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பாக கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதும், கோடை வெயில் கொளுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version