உலகம்

மேகதாது தொடர்பாக கர்நாடகாவில் இன்று ஆலோசனை!

Published

on

பெங்களூர்: மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இது பெரிய திட்டமாக போடப்பட்டுள்ளது. இது காவிரியில் கர்நாடகாவிற்கு கூடுதல் நீரை பெற்றுத்தரும்.

இதற்காக வரைவு அறிக்கையை அம்மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருந்தது. தற்போது மத்திய அரசு இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டு இருக்கும் பச்சை துரோகம் ஆகும்.

நேற்று தமிழக அரசு, மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை மீறி கர்நாடக அரசு செயல்பட்டு இருப்பதாக தமிழக அரசு வழக்கு தொடுத்து இருக்கிறது. அதேபோல் இது தொடர்பாக இன்று தமிழக சட்டசபை கூட உள்ளது.

இதில் இந்த பிரச்சனை தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.  இதற்கு மத்தியில் கர்நாடகாவிலும் இது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version