சினிமா
முதல் வருமானம் ரூ.500, இன்று ரூ.150 கோடிக்கு சொந்தக்காரர்.. 10 வருடத்தில் பிரபல நடிகையின் வளர்ச்சி..!
பிரபல நடிகை ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன்னர் தனது முதல் படத்தில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் என்ற நிலையில் தற்போது அவர் 150 கோடி நிறுவனத்திற்கு உரிமையாளர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பத்தாண்டுகளில் கோடி கணக்கில் சம்பாதித்த அந்த நடிகை பிரபல பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தின் போது நடிகை ஆலியா ஆடை விற்பனை நிறுவனம் ஒன்றை தொடங்கினார். 2 முதல் 14 வயது குழந்தைகளுக்கான ஆடைகளை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் இணையதளம் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் சுமார் 800 வகையான ஆடைகள் இந்த நிறுவனத்தில் விற்பனைக்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த நிறுவனம் 10 மடங்கு வளர்ச்சியை பெற்றிருப்பதாகவும் ஒரு கோடி முதலீட்டில் இந்நிறுவனம் தொடங்கிய நிலையில் தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு ரூபாய் 150 கோடி என்றும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் நேரத்தில் ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்குவது தான் எங்கள் குறிக்கோளாக இருந்தது என்று ஆனால் அது படிப்படியாக வளர்ந்து தற்போது 150 கோடி வணிகமாக மாறி உள்ளது என்றும் நடிகை ஆலியா பட் கூறியுள்ளார். ஆரம்ப காலத்தில் சில சவால்கள் இருந்த போதிலும் அதன் பிறகு நல்ல வருவாய் கிடைத்தது என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை ஆலியா பட் ஒரு மிகச்சிறந்த முதலீட்டாளர் என்பதும் நைக்கா மற்றும் ஃபூல்.கோ நிறுவனங்களில் அவர் கோடிக்கணக்கில் முதலீடு செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு ’ஸ்டூடண்ட் ஆப் இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் அதற்கு முன்பு ஒரு சில படங்களில் சிறிய கேரக்டரில் 500 ரூபாய்க்கு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் சொத்து மதிப்பு ரூ.299 கோடி என கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் தகவலின்படி, அவர் 2017 இல் ரூ. 39.88 கோடி சம்பாதித்துள்ளார், 2018 இல், அவர் ரூ. 58.83 கோடி சம்பாதித்தார், 2019 ஆம் ஆண்டில், அவர் ரூ 59.21 கோடி சம்பாதித்தார். ஒரு படத்திற்கு அவர் வாங்கும் சம்பலம் 20 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்க்தக்கது.
ஆலியா பட் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி ஏ6, ஆடி க்யூ7 மற்றும் ரேஞ்ச் ரோவர் வோக் உள்ளிட்ட பல கார்களை வைத்துள்ளார். இந்த கார்களின் மதிப்பு ரூ.3 கோடி என்பதும் அவருக்கு மும்பையில் இரண்டு வீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.