சினிமா செய்திகள்

மீரா மிதுன் கைதும் மவுனம் சாதித்த தமிழ் திரையுலகமும் – விளாசும் விசிக பிரமுகர்!

Published

on

தன்னை ஒரு சூப்பர் மாடல் என்று சொல்லிக் கொள்ளும் மீரா மிதுன், சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இன மக்களை இழிவுபடுத்திப் பேசியிருந்தார்.

அதற்கு எதிராக பலர் புகார் கொடுத்தப் பின்னரும் தன்னை யாராலும் நெருங்க முடியாது என்று சவால் விட்டு வீடியோ போட்டார். இந்நிலையில் சர்ச்சை நாயகி மீரா, நேற்று கேரளாவில் மறைந்திருந்த இடத்தில் தமிழக காவல் துறையால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.

தான் கைது செய்யப்பட்ட நேரத்தில் கூட, போலீஸாரை மிரட்டும் வகையில் ‘என்னைத் தொட்டீங்க… செத்துருவேன்’ என்று மிரட்டினார். இது குறித்த வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கைதுக்கும் மீரா மிதுனின் பேச்சுக்கும் தமிழ்த் திரையுலகம் பெரிதாக வாய் திறக்கவில்லை. இதைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு.

அவர், ‘பறசாதி பயலுக…. என தமிழ்நாட்டின் தொல்குடியை இழிவு படுத்தும் நோக்கத்தில் பேசிய நடிகையை கைது செய்த தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி!

இயக்குனர் நவீன் அவர்களை தவிர,
திரைத்துறையினர் யாரும் இந்த சாதியப்போக்கை கண்டிக்காதது ஏனோ? சீமான் அண்ணன் கூட கண்டிக்காதது ஏனோ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version