சினிமா செய்திகள்

தற்கொலை செய்யலாம் என தோன்றுகிறது.. மீரா மிதுன் அதிரடி டிவிட்!

Published

on

விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் மீரா மிதுன். பின்னர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் மீரா மிதுன் நடித்தார்.

ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத புகழும் சர்ச்சையும் மீரா மிதுனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்தாத மீரா மிதுன், இயக்குனர் மற்றும் நடிகர் சேரனுடன் பெரும் சர்ச்சையையும் கிளப்பினார்.

மீரா மிதுனின் செயல் பிக்பாஸ் வீடு மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. பிக்பாஸ் விட்டு வெளியே வந்த பிறகு தான் ஒரு சூப்பர் மாடல். எனக்கு உலகம் முழுவதும் பெயர் உண்டு.

இங்கு உள்ள நடிகர்கள் எல்லாம் சும்மா. அவர்கள் எல்லாம் என் காலுக்கு கீழ் தான் என்று கூறி வந்தார். தன் தற்பெருமையைப் பேசி பிரபலமாகலாம் என்று நினைத்த மீரா மிதுன் மீது மக்களுக்கு ஒவ்வொரு நாளும் எரிச்சல் தான் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை டேக் செய்து டிவிட்டரில் பதிவிட்ட மீரா மிதுன், “நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். தற்கொலை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதைத்தான் நான் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறேன். என்னை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்கள். மனம் நிம்மதி இன்றி உள்ளது. நான் இறந்துவிட்டால், என் மரணத்துக்குக் காரணமானவர்களைத் தூக்கிலிடுங்கள். கடந்த மூன்று ஆண்டாக இது மாதிரியான தொல்லையை நான் சிந்தித்து வருகிறேன். தயவு செய்து தடுத்து நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version