தமிழ்நாடு

என்னை கைது செய்வது என்பது கனவில் தான் நடக்கும்: நடிகை மீராமிதுன்

Published

on

என்னைக் கைது செய்வது என்பது கனவில் தான் நடக்கும் என நடிகை மீரா மிதுன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பட்டியல் இன மக்களை அவதூறாக பேசியதாக நடிகை மீராவின் மீது புகார் எழுந்ததை அடுத்து அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் இது குறித்து விளக்கமளிக்க காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்மனை ஏற்று அவர் போலீசில் ஆஜராவாரா? அல்லது தலைமறைவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் ’என்னை தாராளமாக கைது செய்யுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்குச் செல்லவில்லையா? என்று கூறியதோடு ஆனால் என்னை கைது செய்வது என்பது நடக்காது என்றும் அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை என்றும் அந்த மக்களில் எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களை மட்டுமே தவறானவர்கள் என்று நான் சொன்னேன் என்றும் நடிகை மீரா மிதுன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் நான் ஒரு புத்திசாலி, பிரபலம். அதுவும் உலக பிரபலம் என்றும், தமிழ்நாட்டில் என்னைப் போன்ற ‘புத்திசாலி’ பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை மீரா மிதுன் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version