சினிமா
பண மோசடி வழக்கில் பிக்பாஸ் வீட்டிலுள்ள மீராவுக்கு முன் ஜாமீன்!
நடிகர் கமல் ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்துகொண்டுள்ள மீரா மிதுனுக்கு வழக்கு ஒன்றில் முன்ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.
50 ஆயிரம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக சென்னை தி.நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் பிக் பாஸ் வீட்டில் உள்ள மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து ஜூலை 19-ஆம் தேதிக்குள் மீரா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தேனாம்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பினர். மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் மீரா மிதுன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதால், தற்போது ஆஜராக முடியாது என்றும் நிகழ்ச்சி முடிந்தபின் ஆஜராவதாகவும் அவரது சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.