சினிமா செய்திகள்

வாய் தவறி தவறாக பேசிவிட்டேன் – ஜாமின் கேட்டு விண்ணப்பித்த மீராமிதுன்….

Published

on

வாய் தவறி தவறாக பேசிவிட்டேன் – ஜாமின் கேட்டு விண்ணப்பித்த மீராமிதுன்….

மாடல் அழகியும், பிக்பாஸ் மூலம் பிரபலமானவருமான மீராமிதுன் திரையுலகில் தலித் சமூகத்தை சேர்ந்த இயக்குனர்களை சினிமாவை விட்டே விரட்ட வேண்டும் எனவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறினர். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேரளாவில் பதுங்கியிருந்த அவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவரின் ஆண் நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். மீராமிதுன் யுடியூப் சேனலை முடக்கும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தன்னை மிகவும் இழிவாக விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்த போது தெரியாமல் பட்டியல் இனத்தவர் பற்றி தவறாக பேசிவிட்டேன். எனக்கு ஜாமின் கொடுங்கள் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version