சினிமா செய்திகள்

என்னை கைது செய்தால் செத்துருவேன்: கைதுக்கு முன் மிரட்டிய மீரா மிதுனின் வீடியோ!

Published

on

என்னை கைது செய்தால் தற்கொலை செய்து செத்துவிடுவேன் என்று மீராமிதுன் கைது செய்ய வந்த போலீசாரை மிரட்டியதாக கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் என்னை யாரும் கைது செய்ய முடியாது என்றும் என்னை கைது செய்து விடலாம் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம் என்றும் தெனாவட்டாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் மீராமிதுன் கேரளாவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து கேரளா சென்ற தனிப்படை அவரை கைது செய்தது. கைது செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் மீரா மிதுன் அழுதுகொண்டே பதிவு செய்த வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் என்னை தமிழ்நாடு போலீசார் டார்ச்சர் செய்தார்கள் என்றும் முதலமைச்சர் அவர்களும் பிரதமர் மோடி அவர்களும் உடனே இதில் தலையிட வேண்டும் என்றும் ஒரு பெண்ணுக்கு செய்யும் கொடுமை இது தானா என்று அழுது கொண்டே அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் என்னை கைது செய்தால் நான் செத்து விடுவேன் என்றும் அவர் மிரட்டி இருக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version