தமிழ்நாடு

ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலையில் மீராமிதுன்!

Published

on

நடிகை மீரா மிதுன் ஏற்கனவே பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

நடிகை மீரா மிதுன் மீது வியாசர்பாடியை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நடிகை மீரா மிதுன் சமூகவலைதளங்களில் தனது பெயரையும் புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் மீராமிதுன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீராமீதுன் மனுதாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி லட்சுமி போலீஸ் காவல் கேட்குமளவுக்கு பெரிய அளவில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கூறி மீராமிதுனுக்கு ஜாமின் அளித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் மீராமிதுனுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காத நிலையில் ஜோ மைக்கேல் புகாரின் அடிப்படையில் பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அவர் மீது பட்டியலினத்தவர் குறித்து பேசிய வழக்கில் ஜாமின் கிடைக்கவில்லை என்பதால் அவர் தற்போது சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version