சினிமா

சேரன் மீது அபாண்டமான பழி: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா!

Published

on

பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு வந்த மீரா தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே சேரனுக்கும், மீரா மிதுனும் இடையே ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. மீரா எப்பொழுதும் சேரன் மீது ஏதாவது குறை கண்டுபிடித்து அவர் மீது குற்றம் சுமத்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மீரா அதன் எல்லைக்கே சென்று சேரம் மீது அபாண்டமாக ஒரு பழியை போட்டார்.

டாஸ்கின் போது சேரன் எதிர்பாராத விதமாக மீராவை சற்று தள்ளி லாஸ்லியாவின் கையில் இருந்த பொருளை பறிக்க முயல்கிறார். ஆனால் அதனை மீரா மிகப்பெரிய பூதாகரமான விஷயமாக மாற்றிவிட்டார். சேரன் தன்னை மிக கொடூரமாக கையாண்டதாகவும், அவர் என்னுடைய வயிற்றில் கையை வைத்து என்னை அப்படியே தூக்கி வீசியதாகவும், அது ஆக்ரோஷமாக இருந்ததாகவும், அதில் தவறான எண்ணம் இருந்ததாகவும் அடுக்கடுக்காக சேரன் மீது கழங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் மீரா குற்றம் சாட்டினார்.

இதனால் பிக் பாஸ் வீடு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் அந்த வீடியோவை திரும்ப பார்க்கும் போது மீரா சொன்னது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை. சேரன் சாதரணமாக மீராவை சற்று மெதுவாக ஒதுக்கிவிட்டு லாஸ்லியாவிடம் உள்ள பொருளை கைப்பற்ற முயல்கிறார். இதில் மீரா சொன்னது போல எந்த செயலிலும் சேரன் ஈடுபடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஆனால் மீராவின் மிக வக்கிரமான இந்த குற்றச்சாட்டால் மனமுடைந்த சேரன் தனது குடும்பத்தை நினைத்து அழுதுவிட்டார். செய்யாத தவறுக்காக பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் மீரா இந்த விஷயத்தை விடாமல் பெரிதாக்கி கொண்டிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மீரா மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரத்தில் கமல் இது தொடர்பான குறும்படத்தை போட்டுக்காட்டி மீராவின் முகத்திரையை கிழிக்க வேண்டும் எனவும். மீராவுக்கு வாக்களிக்காமல் அவரை வெளியேற்றவும் சமூக வலைதளங்களில் இதனை விவாதித்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் முதல் வாரத்தில் இருந்து வெளியேற்றும் நாமினேஷனில் ரசிகர்களால் காப்பாற்றப்பட்டு வந்த மீராவை இந்த வாரம் காப்பாற்றவில்லை. இதனால் குறைவான வாக்குகள் பெற்ற மீரா இன்று வெளியேற்றப்பட்டதாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஞாயிற்றுக்கிழமை தான் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சேரன் மீது வீண் பழி சுமத்திய மீராவுக்கு ரசிகர்கள் நல்ல முடிவை கொடுத்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version