சினிமா

ஒப்பந்தம் தெளிவாக உள்ளது; மதுமிதா பிரச்சனை செய்வது தவறு: மீரா, சாக்‌ஷி கருத்து!

Published

on

பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதாவுக்கு விஜய் டிவி தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பள விவகாரத்தில் மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுத்ததாக விஜய் தொலைகாட்சி தரப்பு புகார் அளித்தது. இதனையடுத்து தனது தரப்பு விளக்கத்தை செய்தியாளர்களை சந்தித்து கொடுத்தார் மதுமிதா.

மதுமிதாவுக்கு மீதமுள்ள சம்பள தொகையை பின்னர் தருவதாகவும் விஜய் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதித் தொகையை உடனே தர வேண்டும் என்றும் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியதாக மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்திருந்தது.

இந்நிலையில், இன்வாய்ஸ் அளித்த உடன் மீதித் தொகையை தந்துவிடுவதாக நிகழ்ச்சி நிர்வாகம் கூறியது. எனது கணவர் சென்று இன்வாய்ஸ் அளித்தபின்னர் விரைவில் சம்பளத்தை தந்துவிடுவதாக கூறினர். ஆனால் அதைத் தொடர்ந்து இப்போது ஏன் இப்படி புகார் அளித்தனர் என்று எனக்கு தெரியவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் மதுமிதா.

இதனையடுத்து அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீரா மிதுன் இதுகுறித்து கூறியபோது, எனக்கும் சேனலுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. மதுமிதா தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டார் எனத் தெரியவில்லை. எங்கள் இருதரப்புக்குமிடையே நல்ல பிணைப்பு உள்ளது. மரியாதையாக நடந்துகொள்வார்கள், நன்றாக கவனித்துக்கொண்டனர் என்றார்.

சாக்‌ஷி அகர்வால் கூறியபோது, 100 நாள்கள் முடிந்தபின்னர் தான் மீதிப் பணம் தரப்படும் என்று ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் எந்த கேஸும் அளிக்கவில்லை. அதனால் இதுபோன்று மதுமிதா நடந்துகொண்டிருக்க கூடாது. அவரது ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியவில்லை என்றார்.

Trending

Exit mobile version