இந்தியா
இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் .
![airport-corona2_0-770x433 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/03/airport-corona2_0-770x433-1.jpeg)
இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் .
மலேசியாவில் தவித்த 150 இந்திய மாணவர்கள் இன்று நாடு திரும்பினர்.பிலிபைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் கொரோனா பீதியில் மலேசியா வழியாக நாடு திரும்ப முடிவு செய்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக மலேசியா ,இத்தாலி,ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் நிறுத்தப்பட்டது.அதன் காரணமாக மலேசிய விமான நிலையத்தில் தவித்து வந்த மாணவர்கள் தங்களை மீட்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர் .
அதில் 80பேர் தமிழக மாணவர்கள்.முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அரசிடம் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாணவர்களை மீட்க உறுதியளித்தார் .
இதைத்தொடர்ந்து இன்று ஏர் ஏசியா விமானம் மூலம் அனைவரும் இந்தியா வந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் வந்திறங்கிய மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்யப் படுகிறது.