தமிழ்நாடு

மம்தா பானர்ஜி பாணியில் முக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

Published

on

தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாணியில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பத்திரிகையாளர்களை கொரோனா வைரஸ் தடுப்பு பணியின் முன்கள பணியாளர்களாக நியமனம் செய்தார். இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலின் அவர்களும் இதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்

மேலும் முன்களப்பணியாளர்களான உரிமைகளும் சலுகைகளும் உரிய முறையில் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பத்திரிகையாளர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேற்குவங்க முதல்வர் பாணியில் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு நிச்சயம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version