Connect with us

தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயிலில் இனி இதையெல்லாம் எடுத்து செல்லக்கூடாது: அதிரடி தடையால் பயணிகள் அதிர்ச்சி

Published

on

சென்னை மெட்ரோ ரயிலில் இனி ஒரு சில பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக தடை விதித்துள்ளதை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இருப்பது சென்னை மெட்ரோ ரயில் என்பதும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்கு எந்த விதமான போக்குவரத்து இடையூறுமின்றி குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அதனால்தான் சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு ஆண்டும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த ரயில் பணி முடிந்து விட்டால் கிட்டத்தட்ட சென்னை நகர் முழுவதும் மெட்ரோ ரயிலில் செல்லும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக கடற்கரைக்கு செல்லும் மெட்ரோ ரயில் சென்னையில் தான் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென சென்னை மெட்ரோ ரயிலில் சமைக்கப்படாத இறைச்சி மீன் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் சமைக்கப்படாத பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்றும் அவ்வாறு கொண்டு செல்லும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உயிரிழந்த பறவைகள் விலங்குகள், உயிருள்ள பறவைகள் விலங்குகள் ஆகியவற்றையும் மெட்ரோவில் எடுத்துச் செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் ஒரு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும் ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூர் மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் மீன்களை எடுத்துச் சென்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் அதன் பின்னர் பெரும் சர்ச்சையான நிலையில் சரியாக பேக் செய்யப்பட்ட இறைச்சிகளை எடுத்துச் செல்லலாம் என பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் சென்னை மெட்ரோ ரயிலிலும் முறையாக பேக் செய்யப்பட்ட இறைச்சிகளை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!