தமிழ்நாடு
புலிவாலை பிடித்ததால் நிம்மதியே இல்லை: வைகோ மகன் விரக்தி பேட்டி!
புலி வாலைப் பிடித்து விட்டதால் எனக்கு நிம்மதியே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ பேட்டி அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக வைகோவின் மகன் துரை வைகோ மீது கட்சி நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். குறிப்பாக மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் கூறிவரும் துரை வைகோ முடியாது என கூறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது .
மேலும் வைகோவால் பதவி பெற்றவர்கள் அவருக்கே துரோகம் செய்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த துரை வைகோ இதுகுறித்து கூறியதாவது:
எனக்கு கட்சி பதவி மீது ஆசை எதுவும் கிடையாது என்றும் எனது உழைப்பை பார்த்து கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பதவி அளிக்க விரும்பினார்கள் என்றும் அதனை நான் ஏற்றுக் கொண்டேன் என்றும் கூறினார்.
திமுகவுடன் மதிமுக இணைய வாய்ப்பே இல்லை என்றும் திமுகவுடன் நட்புறவுடன் மதிமுக தொடர்ந்து செயல்படவே விரும்புகிறது என்றும் கூறினார். நான் அரசியலுக்கு விரும்பி வரவில்லை என்றும் அரசியலுக்குள் நான் மதிமுக தொண்டர்கள் மூத்த நிர்வாகிகளால் தள்ளப்பட்டு விட்டேன் என்றும் இன்றைக்கு புலிவாலிஅ பிடித்துவிட்டதால் நான் நிம்மதியின்றி இருக்கின்றேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.