தமிழ்நாடு

சுயேட்சைகள் வெற்றி பெற்றால் புரட்சி வெடிக்கும்: நடிகர் மயில்சாமி

Published

on

தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் புரட்சி வெடிக்கும் என சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்த நடிகர் மயில்சாமி, தற்போது சென்னை விருகம்பாக்கம் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதியில் பிரபலமானவர் என்பதும் அந்த தொகுதி மக்களை நன்கு அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு காலத்திலும் சென்னை வெள்ளம் காலத்திலும் இவர் செய்த உதவியை அந்த பகுதி மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கூட ஓட்டு போடுவார்கள் என்று நம்பிக்கையுடன் மயில்சாமி கூறியுள்ளார்.

மேலும் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் அதிருப்தியாக இருப்பவர்கள் சுயேச்சை வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் வேண்டும் என்றும், 234 தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் உள்ளவர்கள் சுயநலமாக இருக்கிறார்கள் என்பதும் அது தன்னை மிகவும் மனம் வருத்தப்பட செய்ததால் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்ததாகவும் மயில்சாமி தெரிவித்தார்.

Trending

Exit mobile version