தமிழ்நாடு
உதயமாகிறது மயிலாடுதுறை மாவட்டம்..!- நாளை முக்கிய அறிவிப்பு
தமிழகத்தின் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை நாளை உதயம் ஆகிறது. நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து புதிய மாவட்டத்துக்கான அடிக்கல்லை திறந்து வைக்கிறார்.
நாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. புதிய மாவட்டத்துக்கான எல்லைகளை வரையறை செய்வதற்கு என்று சிறப்பு அதிகாரிகள் அதற்கென நியமனம் செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் லலிதா ஐ.ஏ.எஸ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐ.பி.எஸ் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.