தமிழ்நாடு

நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: கலெக்டரின் அதிரடி அறிவிப்பு!

Published

on

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது என்பதும் இந்த மழையால் சென்னை உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இன்றும் 19 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து மேலும் சில மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படலாம் என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொடர் மழை காரணமாக நாகை, புதுவை, திருவாரூர், புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version