கிரிக்கெட்

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்: தலை காயத்தால் விலகிய மயங்க் அகர்வால்

Published

on

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார் மயங்க் அகர்வால்.

இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது இந்தத் தொடர். இதற்காக இந்தியக் கிரிக்கெட் அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வலைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மயங்க் அகர்வாலுக்கு இன்று காயம் ஏற்பட்டது.

வலைப்பயிற்சியின் போது மயங்க் அகர்வாலின் தலையில் பந்து பட்டதால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து மயங்க் அகர்வால் விலகி உள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் கில் காயம் காரணமாக விலகி இருந்தார். தற்போது மயங்க் அகர்வாலும் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி உள்ளார்.

இதனால் இந்திய அணியின் பேட்டிங் சற்று நெருக்கடியைச் சந்தித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தொடக்க ஆட்டக்காரர் ஆக கே.எல்.ராகுல் அல்லது அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய இருவரில் யாரேணும் ஒருவரை முதல்கட்ட பேட்ஸ்மேன் ஆக களம் இறக்க இந்திய அணியினர் ஆலோசித்து வருகிறார்களாம்.

Trending

Exit mobile version