சினிமா செய்திகள்

ஹீரோ ஆன திண்டுக்கல் லியோனி மகன்… அறிமுகம் செய்யும் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்!

Published

on

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் ஹீரோவாக ‘மாஸ்டர்’ திரைப்பட தயாரிப்பாளர் மூலம் அறிமுகம் ஆக உள்ளார்.

பட்டிமன்றப் பேச்சாளராக திண்டுக்கல் ஐ.லியோனி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தற்போது திமுக-வில் கொள்கை பரப்புச் செயலாளராக உள்ளார். இவரது மகன் லியோ சிவக்குமார் தற்போது தமிழ் சினிமாவில் நாயகன் ஆக அறிமுகம் ஆக உள்ளார். ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்து வழங்கியவரும் தளபதி விஜய்-ன் உறவினருமான சேவியர் பிரிட்டோ தான் லியோ சிவக்குமாரை தனது தயாரிப்பில் ஹீரோ ஆக அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘அழகிய கண்ணே’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அறிமுக நாயகன் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடிக்க உள்ளார். இயக்குநர் சீனு ராமசாமியிடன் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த விஜயகுமார் என்பவர் அழகிய கண்ணே திரைப்படம் மூலம் இயக்குநர் ஆக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version