சினிமா செய்திகள்
மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் தான் வெளியாகும்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தது. அது குறித்து விளக்கம் அளித்துள்ள படக்குழு, மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “நாம் தொடர்ந்து பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வருகிறோம், எல்லோரும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறோம் என்று நம்புகிறோம்.
மாஸ்டர் படத்தை திரை அரங்குகளில் பார்வையாளர்கள் கொண்டாட உள்ள ஆர்வத்தை எங்களால் உணர முடிகிறது, புரிந்துகொள்ள முடிகிறது. உங்களை போலவே அந்த நாளுக்காக நாங்களும் காத்திருக்கிறோம்.
கடந்த சில நாட்களாக மாஸ்டர் திரைப்படம் பற்றி பல்வேறு வதந்திகள் உலாவி வருகின்றன. எங்களுக்கு பிரபல ஓடிடி சேவை வழங்குநரிடம் இருந்து பெரும் தொகைக்கு அழைப்பு வந்தது. ஆனால் திரை அரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். நெருக்கடியில் உள்ள திரைத்துறை உயிர்பிழைக்க இது தேவையான ஒன்று,
இந்த சமயத்தில் திரை அரங்கு உரிமையாளர்கள் எங்களுடன் நின்று, தமிழ் திரை துறைக்கு ஆதரவு வழங்க வேண்டும். விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்க விரும்புகிறோம். பாதுகாப்பாக இருங்கள்.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.