Connect with us

வணிகம்

அதிகரிக்கும் பணிநீக்கம்.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

Published

on

சர்வதேச ஐடி நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில் முனைப்பாக உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி துறையில் ஏற்பட்டு வரும் ஆட்டோமேஷன் போன்ற காரணங்களால் ஆட்குறைப்பு, பணிநீக்கம் போன்றவை அதிகமாகி வந்தன. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஐடி நிறுவனங்களின் வியாபாரம் மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது. புதிய ஆர்டர்கள் கிடைக்காமல், இருக்கும் ஊழியர்களுக்கு வேலை வழங்க முடியாமல் சம்பளத்தை மட்டும் அளிக்கும் நிலைக்கு ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கொரொனா தொற்று ஆரம்பக்கட்டத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் இருக்காது என்று அறிவித்த ஐபிஎம் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள், தற்போது பணிநீக்கம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளன.

ஐபிஎம்

ஐபிஎம் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 3,50,000 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 2000 நபர்களைப் பணி நீக்கம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சில நூறு ஊழியர்கள் இதனால் வேலையை இழப்பார்கள்.

காக்னிசண்ட்

தமிழர்கள் அதிகம் வேலை பார்க்கும் கானிசெண்ட் நிறுவனத்தில் அண்மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காக்னிசெண்ட் நிறுவனத்தின் 2,90,000 ஊழியர்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் நபர்கள் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்காததாலும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களும் தங்களது பட்ஜெட்டை குறைத்துள்ளதாலும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதிலும் திறன் குறைந்த ஊழியர்களை மட்டுமே பணியிலிருந்து நீக்குவதாக ஐடி நிறுவனங்கள் கூறுகின்றன.

சர்வதேச ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கத்தைக் கையில் எடுத்துள்ளன, ஆனால் இந்திய ஐடி நிறுவனங்களான இஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் நிறுவனங்கள் இதுவரை பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. கொவிட்-19 காரணமாக பணிநீக்கம் இருக்காத என்று டிசிஎஸ் நிறுவனம் தங்களது 4வது காலாண்டு அறிக்கையின் போது தெரிவித்துள்ளது. ஆனால் திறன் அடிப்படையில் இருக்க வாய்ப்புள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தில் மிகப் பெரிய அளவில் பணிநீக்கம் இந்த ஆண்டு இருக்காது. ஆனால் திறன் அடிப்படையில் பணிநீக்கம் தொடரும் என்று தலைமை செயல்பாட்டு அதிகாரியான பிரவின் ராவ் அன்மையில் தெரிவித்துள்ளதை ஐடி ஊழியர்கள் கவனிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!