இந்தியா

மக்களே… இனி மாஸ்க் போட்டாதான் பெட்ரோல், டீசல்..!

Published

on

தமிழகத்திலும் இந்தியாவிலும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை, உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் வேகம் அதிகரிக்க, பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது முக்கியக் காரணம் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே கொரோனா தடுப்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று முதல் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்- டீசல் வழங்கப்படும் என்று தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய அளவில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.

 

Trending

Exit mobile version