பிற விளையாட்டுகள்

மேரி கோம் குத்துச்சண்டைப் போட்டியில் தோல்வி.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!

Published

on

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

டோக்கியோவில் நடைபெற்றும் வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில், 51 கிலோ குத்துச்சண்டை எடைப் பிரிவில் போட்டியிட்டார் மேரி கோம்.

காலிறுதியாக்கு முந்தைய போட்டியில் கொலபம்பிய வீராங்கனை வாலன்சியாவை எதிர்த்துப் போட்டியிட்டார் மேரிகோம். 3-2 என்ற செட் கணக்கில் மேர் கொம் தோல்வியைச் சந்தித்தார்.

மேரி கோம் விளையாடும் கடைசி ஒலிம்பிக்ஸ் இது என்று கூறப்பட்டு வந்த நிலையில், கண்டிப்பாக மேரி கோம் ஒரு பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தியர்களின் அந்த கனவு இன்று தகர்ந்தது.

2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் வெங்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய மற்றும் பிற உலக சாப்பியன்ஷிப் போட்டிகளில் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version