தமிழ்நாடு

சூர்யாவை மிரட்டுவது கோழைத்தனம்: மார்க்கிஸ்ட் கட்சிகண்டனம்

Published

on

மத்திய அரசின் பல திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவருக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம் ஏற்றிருப்பது கோழைத்தனமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா முதல் முதலாக குரல் கொடுத்தார். அவரை அடுத்து அவரது சகோதரர் கார்த்தி, விஷால், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், ராஜூமுருகன் உள்பட பலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் புதிய ஒளிப்பதிவு சீருதிருத்த சட்ட மசோதாவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நீட்தேர்வு, புதிய கல்விக் கொள்கை, ஒளிப்பதிவு சீர்திருத்த மசோதா உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து சமீபத்தில் நடந்த பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் சூர்யா மீது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவை தீர்மானம் போட்டு மிரட்டுவது கோழைத்தனம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யாவை மிரட்டும் நோக்கில் தீர்மானம் போட்ட பாஜகவின் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு என்றும் நீட், சினிமா சட்ட திருத்தம் பற்றிய விமர்சனங்களை நியாயமான முன்வைக்கிறார் சூர்யா என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் சூர்யாவுக்கு எதிராக தீர்மானம் போட்ட பாஜகவை மற்ற கட்சிகளும் கண்டித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version