செய்திகள்
மெரினா பீச் விசிட்-க்கு இனி தடை இல்லை..!
மெரினா கடற்கரைக்கு மக்கள் வருவதற்காக இருந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்வு செய்யப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது மெல்ல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இத்தனைக் காலம் சென்னை மக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதற்காகப் போடப்பட்டிருந்த தடை நாளை நீக்கப்படுகிறது. டிசம்பர் 14-ம் தேதி முதல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருகை தரலாம்.
இதற்காக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரத் தூய்மை மற்றும் பாதுகாப்புக்கு அதிகாரிகள் சீரிய நடைமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர்.