தமிழ்நாடு

மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 அரசு வேலை: முதல்வர் உத்தரவு

Published

on

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித்தந்த தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு குரூப்-1 அரசு வேலைக்கான உத்தரவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் பிறப்பித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற மாரியப்பன் தங்கவேலு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அரசு பணிக்கான ஆணையை இன்று மாரியப்பன் நேரில் வழங்கினார்.

மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாடு காகித ஆலை மார்க்கெட்டிங் பிரிவு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரை சந்தித்து பணி ஆணையை பெற்ற மாரியப்பன் தங்கவேலு செய்தியாளர்களிடம் பேசியபோது குரூப் 1 பணிக்கான பணி நியமன ஆணை தமிழக முதல்வர் அளித்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version