சினிமா செய்திகள்

வீட்டின் முன்னுள்ள வெள்ளத்தில் பாட்டு பாடி படகு ஓட்டும் மன்சூரலிகான்: வீடியோ

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக படகு போக்குவரத்தும் ஒரு முக்கிய போக்குவதாக மாறிவிட்டது என்பதும், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மீட்பு படையினர் படகில் மூலம்தான் மீட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல நடிகர் மன்சூர்அலிகான் தனது வீட்டின் முன் வெள்ளம் சூழ்ந்துள்ளதை அடுத்து படகில் சவாரி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

படகில் அவர் சவாரி செய்துகொண்டு சென்னையின் நிலைமை குறித்தும் தமிழர்களின் நிலைமை குறித்தும் அவர் பாட்டு பாடியவாறு இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தன் வீட்டின் முன்னே சூழ்ந்துள்ள மழை நீரில் பாட்டு பாடிக்கொண்டே படகு ஒட்டிய நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோவுக்கு நெட்டிசன்களும் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version