சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் என்ன நிலைமையில் இருக்கு? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

Published

on

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளன.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னத்தின் பல வருட கனவு ஆகும். பெரிய நடிகர் பட்டாளத்தயே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். விக்ரம், ’ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர்கள் பட்டாளமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் என திரைத்துறையின் முன்னோடி அணிவேர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் கொரோனா பாதிப்பு காரணமாக பாதியியில் நிறுத்தப்பட்டது.

தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்புகள் 1 மாதம் இடைவெளி இல்லாமல் நடக்க உள்ளது. கார்த்தி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், விக்ரம் ஆகியோர் படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர். படப்பிடிப்புகள் முடிந்து இந்த வருடம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளிவரும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Trending

Exit mobile version