சினிமா செய்திகள்

கங்கனா மீது மணிகர்ணிகா இயக்குநர் அதிரடி குற்றச்சாட்டு!

Published

on

கடந்த குடியரசு தினத்தன்று வெளியான மணிகர்ணிகா படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மேலும், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனமே கிடைத்துள்ளது.

இந்நிலையில், கங்கனா தன்னை இருட்டடிப்பு செய்துவிட்டதாக படத்தின் இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி தெரிவித்துள்ளார்.

சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கிய கிரிஷ் ஜெகர்லமுடி, சமீபத்தில் வெளியான என்.டி.ஆர் பயோபிக்கையும் இயக்கியிருந்தார். மேலும், மணிகர்ணிகா படத்தின் இயக்குநரும் இவர்தான்.

ஆனால், முழு படத்தையும் முடித்துக் கொடுத்த இவருக்கு, இயக்குநர் அந்தஸ்து வழங்காமல், இயக்குநர் என்ற பெருமையை வெறும் பேட்ச் வொர்க் மட்டுமே செய்துக் கொண்டு கங்கனா போட்டுக் கொண்டதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார் கிரிஷ்.

மேலும், 400 நாட்கள் இந்த படத்திற்காக உழைத்தேன். ஆனால், வெறும் 30 சதவீத சம்பளம் தான் கங்கனா கொடுத்தார் என பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version