தமிழ்நாடு

ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த நபர்: தற்கொலைக்கு முயற்சியா?

Published

on

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஒருவர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆர்.ஏ.புரம் என்ற பகுதியைச் சேர்ந்த விஜய கிருஷ்ணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தனது வாகனத்தை நிறுத்திவிட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களின் உதவியுடன் கீழே விழுந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவருக்கு சோதனை செய்ததில் அவருடைய இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த நபரின் பெயர் விஜயகிருஷ்ணன் என்றும் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version