இந்தியா
25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த நபரை கண்டுபிடிக்க உதவிய சமூக வலைத்தளங்கள்: ஆச்சரிய தகவல்
25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த நபர் சமூக வலைதளத்தில் உதவியால் தற்போது குடும்பத்துடன் இணைந்து உள்ள ஆச்சரியமான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர மௌரியா என்பவர் திருவிழா ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டார். அவர் பேச்சு குறைபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொலைந்து போன அவரை கடந்த பல ஆண்டுகளாக அவரது குடும்பத்தினர் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. அவரது கையில் இருந்த டாட்டூ ஒன்று தான் அவரை அடையாளம் காண உதவும் ஒன்றாக இருந்தது.
இந்த நிலையில் தொலைந்து போன ஜிதேந்திரா அமேதியில் இருப்பதாக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. டாட்டுவுடன் ஜிதேந்திரா இருந்த அந்த புகைப்படத்தை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அமேதி சேர்ந்து பார்த்த போது அங்கு அவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.
ஆனால் மீண்டும் ஜிதேந்திரா மற்றொரு நகரில் இருப்பதாக மற்றொரு சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வந்தபோது அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அவரைக் கண்டு பிடித்தனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் மாமாவை கண்டுபிடித்தது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்கும் என அவரது உறவினர் சந்திரசேகர் என்பவர் தெரிவித்துள்ளார். தனது உறவினர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை ஜிதேந்திரா கட்டிப்பிடித்து தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு தொலைந்த ஒரு நபர் சமூக ஊடகத்தில் வெளியான ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.