இந்தியா

ரெயிலுக்கு அடியில் தடுக்கி விழுந்தவரை தக்க சமயத்தில் ஓடி வந்த காப்பாற்றிய காவலர் – வைரல் வீடியோ!

Published

on

டெல்லியில் ஓடும் ரெயிலுக்கு அடியில் தடுக்கி விழுந்தவரை ஓடாடி வந்து காப்பாற்றி உள்ளார் வீரதீர காவலர் ஒருவர். இந்த சம்பவம் குறித்தான காணொலி சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

டெல்லியின் கன்டோன்மென்ட் பகுதியில் இருக்கும் ரெயில் நிலையத்துக்கு ஒருவர் பெட்டிகளுடன் பயணம் செய்ய வந்துள்ளார். அப்போது ரெயில் கிளம்புவதைப் பார்த்த அந்த நபர், அவசர அவசரமாக அதில் ஏற முயன்றுள்ளார்.

ரெயில் பெட்டியில் ஒரு காலை வைத்த அந்த நபரால் இன்னொரு காலை வைத்து ஏற முடியவில்லை. இதற்குள் ரெயில் வேகமாக புறப்படவே தடுமாறி தடுக்கி விழுந்தவர். அப்படி விழுந்தவர் ரெயிலுக்கு அடியில் சிக்கும் நிலை ஏற்பட்டது.

அப்போது அங்கு பணியில் இருந்த ரெயில்வே காவலர் ராஜ்வீர் சிங், அந்தப் பயணியின் கைகளைப் பற்றி இழுத்துள்ளார். அவர் ரெயிலில் சிக்காமலும் இழுத்து வெளியே தள்ளியுள்ளார். இதுகுறித்தான காணொலி தான் தற்போது வைரலாகி வருகிறது.

இது பற்றி ரெயில்வே நிர்வாகம், ‘உயிர் மிகவும் விலை மதிப்பற்றது. எனவே பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்’ என்று தெரிவித்து உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version