இந்தியா
குடிபோதையில் 11 வயது மகனை கொளுத்திய தந்தை! உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!
ஹைதராபாத்தில் குடிபோதையில் பெற்ற மகனையே கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குஹட்பல்லியைச் சேர்ந்த பாலு என்பவர் கடந்த ஞாயிறன்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது 11 வயது மகன் சரண் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் அவனுக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில், சரண் சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் என்றும் பாராமல் அடித்து உதைத்துள்ளார். பின்பு பீடியும் தீப்பெட்டியும் வாங்கி வரச் சொல்லியுள்ளார். சரணும் பயத்துடன் தந்தை கேட்டதை வாங்கிக் கொடுத்துள்ளான்.
அதன்பிறகும் ஆத்திரம் குறையாமல், குடிபோதையில் மகன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். சரணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சரணை மீட்டு 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.