வைரல் செய்திகள்

ஒரே மேடையில் இரண்டு காதலிகளை திருமணம் செய்த ஆண்; இரு பெண்களும் ‘ஹாப்பி’!

Published

on

சத்தீஸ்கரில் 24 வயதுடைய ஆண், தன் இரண்டு காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தால் இரண்டு பெண்களும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்து மவுரியா, 3 ஆண்டுகளுக்கு முன்னர் 21 வயதுடைய சுந்தரி கஷ்யப்பை சந்தித்துள்ளார். இருவரும் காதலில் விழுந்துள்ளனர். போன் மூலம் அவர்களின் காதல் தொடர்ந்துள்ளது.

ஓராண்டுக்குப் பின்னர் 20 வயதுடைய ஹசீனா பாகல் என்பவரையும் சந்து சந்தித்து, அவர் மீதும் காதல் வயப்பட்டுள்ளார். ஹசீனாவும் காதலுக்கு சம்மதம் தெரிவித்து, அவரும் போன் மூலம் காதலை வளர்த்து வந்துள்ளார். சுந்தரிக்கு, ஹசீனா குறித்த விஷயம் தெரிய வருகிறது. அவர் ஹசீனாவுடன் சண்டையிடாமல், இருவரும் சந்துவை காதலிக்கலாம் என்று தீர்வு சொல்கிறார்.

அதே நேரத்தில் சுந்தரி, சந்து வீட்டுக்கு வந்து வாழ ஆரம்பித்துள்ளார். இந்த விஷயம் அறிந்த ஹசீனாவும், சந்து வீட்டுக்கு வந்து வாழத் தொடங்கியுள்ளார். இந்த உறவு குறித்து கிராமத்தினர் கேள்வியெழுப்பவே, இருவரையும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார் சந்து.

ஜனவரி 5 ஆம் தேதி அவர்களின் திருமணம் உறவினர்கள் முன்னிலையில் ஒரே மேடையில் நடந்து முடிந்தது. இத்திருமணம் குறித்து சுந்தரி, ‘நானும் ஹசீனாவும் சந்துடன் சந்தோஷமாக இருக்கிறோம். அவரது குடும்பத்தையும் எங்களுக்குப் பிடித்துள்ளது. அவருடன் நாங்கள் உயிருள்ளவரை வாழ்வோம்’ என்று உறுதியளிக்கிறார்.

 

Trending

Exit mobile version