உலகம்

ஐரோப்பாவிற்கு இடமாற்றம்.. வீடு, காரை விற்ற அமேசான் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published

on

கென்யாவை சேர்ந்த அமேசான் ஊழியர் ஒருவருக்கு ஐரோப்பாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் தனது வீடு, கார் ஆகியவற்றை விற்றுவிட்டு தனது குழந்தையையும் பள்ளியிலிருந்து வெளியேற்றிய நிலையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போது முன்னணி நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அமேசான் நிறுவனம் சமீபத்தில் உலகம் முழுவதும் 18,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்தது என்பதும் இதன் காரணமாக அந்நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கென்யா நாட்டைச் சேர்ந்த அமேசானில் பணிபுரியும் ஐடி ஊழியர் ஒருவர் தான் ஐரோப்பாவிற்கு மாற்றப்பட்டதாக அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவை தெரிந்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அதற்குள் அவர் தனது சொந்த வீடு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை விற்றுவிட்டார். அதன் பிறகு அவர் தனது குழந்தையை பள்ளியில் இருந்து நீக்கிவிட்டார். இதனை அடுத்து அவர் அடுத்த வாரம் ஐரோப்பாவிற்கு பணிக்காக கிளம்ப இருந்த நிலையில் திடீரென அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அமேசான் நிறுவனத்திடம் இருந்து தகவல் வந்தது. இதனால் அவர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

ஐரோப்பாவுக்கு செல்ல இருப்பதாக வந்த உத்தரவை நம்பி நான் வீடு, கார் ஆகிய அனைத்தையும் விற்று விட்டேன் என்றும் தற்போது குழந்தையை கூட பள்ளியில் இருந்து நீக்கிவிட்ட நிலையில் திடீரென இந்த தகவல் வந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் தற்போது மீண்டும் நான் முதலில் இருந்து எனது வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து அவர் தன்னை போன்று யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சில அறிவுரைகளை கூறியுள்ளார். அதில் முதலாவது உங்களுக்கு இடமாற்றம் வந்தால் முதலில் மூட்டை முடிச்சுகளோடு குடும்பத்தோடு செல்ல வேண்டாம், முதலில் நீங்கள் சென்று அங்கு சில காலம் ஆன பின்னர் குடும்பத்தை அழைத்துச் செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

புதிய பாஸ்போர்ட்டுகள், போலீஸ் அனுமதி, ஐரோப்பாவில் பணி சேருவதற்கான அங்கீகார ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்து இருந்த நிலையில் தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version