செய்திகள்
நடந்து போனா கேவலமா?… அந்த பயம் இருக்கணும்!..வைரல் வீடியோ…
![video2 - Bhoomitoday video](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/video2-1.jpg)
பொதுவாக மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கும். அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தேங்கியிருக்கும் தண்ணீரில் வேகமாக வாகனத்தை இறக்கு ஏற்றும்போது அந்த தண்ணீர் அருகில் நடந்து போகும் மீது படும். ஆனால், அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். குறிப்பாக காரில் செல்பவர்கள் பைக்கில் செல்பவர்கள் மீது சேறை இறைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
இந்நிலையில், இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது, ஒருவர் செல்போனில் பேசிகொண்டே சாலையில் நடந்து செல்கிறார். அருகில் நீர் தேங்கியுள்ளது. அவருக்கு பின்னால் வேகமாக ஒரு கார் வருகிறது. எப்படியும் நம் மீது சேறை இறைப்பார் என்பதை யூகித்த அந்த வாலிபர் அங்கிருந்த கல்லை கையில் எடுத்து கண்ணாடியை உடைக்க தயாராகிறார். இதைப்பார்த்த அந்த கார் ஓட்டுனர் காரின் வேகத்தை குறைக்க, வாலிபர் ‘அந்த பயம் இருக்கட்டும்’ என்பது போல் கையில் இருந்த கல்லை கீழே போடுகிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Risk identification and mitigation process pic.twitter.com/Czf2NP7eyI
— Dr.B.Karthik Navayan (@Navayan) July 21, 2021