இந்தியா

12 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: தந்தையின் நண்பருக்கு 10 ஆண்டு சிறை!

Published

on

12 வயது சிறுவன் ஒருவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தையின் நண்பருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் கடந்த 2017 ஜூன் 29-ஆம் தேதி சிறுவன் ஒருவன் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், நான் எனது தந்தையின் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு அவரது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தந்தையின் நண்பர் என்னிடம் இயற்கைக்கு முரணான வகையில் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் அங்கிருந்து வெளியேறி நடந்தது குறித்து எனது தந்தையிடம் தெரிவித்தேன் என கூறியுள்ளார். தனது தந்தையின் உதவியுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்த அந்த சிறுவன் சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென தனது புகாரில் கூறியுள்ளான்.

இதனையடுத்து உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து வந்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற அமர்வு சிறுவனுடன் இயற்கைக்கு முரணான உறவில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version