உலகம்
ஆளையே தூக்கி சென்ற பட்டம்… பதபதைக்க வைக்கும் வீடியோ…
மனிதர்களுக்கு பட்டம் விடும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. பல நாடுகளிலும் இந்த பழக்கம் இருக்கிறது. பொதுவாக சிறுவயதில் எல்லோருக்கும் பட்டம் விடும் பழக்கம் இருந்திருக்கும்.
சென்னையில் எல்லாம் மாஞ்சா நூலில் பட்டம் விடுவார்கள். கயிறு அறுந்து சாலையில் செல்பவர்களின் கழுத்தை அறுத்து பலரும் இறந்து போனதுண்டு. எனவே, மாஞ்சா நூல் பயன்படுத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. விளையாட்டாக பட்டம் விடுவது சில சமயம் விவகாரத்திலும் முடிவதுண்டு.
சமீபத்தில் இலங்கை யாழ்பாணத்தில் வாலிபர்கள் சிலர் பட்டம் விட்டனர். அப்போது பட்டம் விட்டவரை பட்டம் மேலே தூக்கு கொண்டு பறந்தது. சில நிமிடங்கள் அந்தரத்தில் தொங்கிய அவர் அதன்பின் ஒருவழியாக கீழே குதித்து உயிர் தப்பினார். கீழே மண்ணில் விழுந்த பின்னரே அவருக்கு உயிர் திரும்பியது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் பட்டத்தினால் தூக்கி செல்லப்பட்ட இளைஞர். சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்#SriLanka #Kite #JananesanNews pic.twitter.com/bUgF0BEpjQ
— JANANESAN News (@JananesaN_NewS) December 21, 2021