உலகம்
அராத்து மனைவி; 62 ஆண்டுகள் செவிடனாக நடித்த கணவன்!
அமெரிக்காவில் அதிகம் பேசும் மனைவியின் சித்திரவதையிலிருந்து தப்பிக்க 62 ஆண்டுகளாகக் காது கேட்காது என்று ஏமாற்றி வந்த கணவரிடம் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார் மனைவி.
அமெரிக்காவின் கனெக்டிக்ட் பகுதியைச் சேர்ந்த 84 வயதான பாடி டவ்சன், இவரது மனைவி டீரத்தி. இருவருக்கும் திருமணமான சில நாட்களில் மனைவி அதிகம் பேசுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டவ்சன் தனக்குக் காது கேட்காமல் போய்விட்டது என்று கூறியுள்ளார். பின்னர் அதை 62 ஆண்டுகள் அப்படியே தொடர்ந்துள்ளார்.
காது தான் கேட்கவில்லை என்று சில நாட்கள் முன்பு சைகை மொழியில் அவரது மனைவி பேசத் தொடங்க கண் பார்வை மங்கி வருகிறது என்று பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதை இவரது 6 பிள்ளைகள், 13 பேரன், பேத்திகள் என அனைவரும் நம்பி வந்துள்ளனர்.
ஆனால் அன்மையில் நடந்த ஒரு பார்ட்டியில் அழகாகப் பாடல் பாடியது யூடியுபில் வீடியோவாக வெளியாக அதைப் பார்த்து அவரது வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டும் சிக்கிக் கொண்டுள்ளார்.
இத்தனை வருடங்களாகத் தனது கணவர் தன்னை ஏமாற்றி வந்துள்ளார். அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத் தாருங்கள் என நீதிமன்றத்தில் டவ்சனின் மனைவி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதிகம் பேசும் மனைவியிடம் அடிக்கடி டவ்சனுக்குச் சண்டை ஏற்பட்டுள்ளது. இயற்கையிலேயே அமைதியான சுபாவம் கொண்டவர் டவ்சன். எனவே அதிகம் பேசும் மனைவியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மற்றும் திருமணம் பந்தத்தில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவே டவ்சன் இப்படிச் செய்துள்ளார் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டு வருகிறார்.