செய்திகள்

குடிபோதையில் கல்லூரி பேருந்தை மறித்து ரகளை…அதிர்ச்சி வீடியோ…

Published

on

தமிழகத்தில் போதை ஆசாமிகள் செய்யும் அலப்பறை நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 2 நாட்களாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என 2 நாள்கள் பண்டிகை விடுமுறை என்பதால் டாஸ்மாக்கில் மதுபான விற்பனை ஜோரக நடந்தது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குமாரகுறிச்சியில் முளைப்பாரி திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டனர். வடிவேலு ஸ்டைலில் வேட்டியை கழட்டி, பட்டா பட்டி டிராயரோடு அலப்பறை செய்தனர். அப்போது, பெண்கள் கல்லூரி பேருந்து ஒன்று அந்த வழியாக வந்தது.

அதை வழி மறித்து அவர்கள் அலப்பறை செய்தனர். அதில் ஒருவர் கால் மேல் கால் போட்டு சாலையில் படுத்துக்கொண்டார். மேலும், அவர்களில் ஒருவர் இவற்றையெல்லாம் வீடியோ எடுத்து தன்னுடைய செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாகவும் வைத்தார்.

இந்த வீடியோ இணையத்தில் கசியவே, நெட்டிசன்கள் பலரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு புகார் அளித்தனர். தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Gopalurangapuli/status/1448909353185005569

seithichurul

Trending

Exit mobile version